×

பாளை சிறையில் கைதி கொலை சிபிசிஐடி வழக்கு

நெல்லை: பாளை சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடைபெற உள்ளது. நெல்லை மாவட்டம் மூன்றடைப்பை அடுத்த வாகைக்குளத்தை சேர்ந்த முத்துமனோ (27), பாளை சிறையில் நடந்த மோதலில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை கடந்த 25ம் தேதி சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பெருமாள்புரம் போலீசார், வழக்கு உள்ளிட்ட ஆவணங்களை நெல்லை சிபிசிஐடி போலீஸ் டிஎஸ்பி அனில்குமாரிடம் நேற்று ஒப்படைத்தனர். அவரது தலைமையிலான குழுவினர் கொலை வழக்கு, தீண்டாமை தடுப்பு, கொலை முயற்சி, கும்பலாக தாக்குவது, கொடூரமாக தாக்குவது உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இன்று முதல் சிபிசிஐடி குழுவினர் விசாரணையை துவக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : CBCID ,Pali jail , CBCID case of prisoner murder in Pali jail
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...