×

நடிகை ரைசா வில்சனிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு மருத்துவர் பைரவி செந்தில் வழக்கு....! பொதுவெளியில் எங்களை பற்றி அவதூறாக பேசியதாக புகார்

சென்னை: நடிகை ரைசா வில்சனிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக மருத்துவர் பைரவி செந்தில் கூறியுள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தோல் சிகிச்சை மருத்துவர் பைரவி செந்திலிடம் சில வாரங்களுக்கு முன்னதாக நடிகை ரைசா வில்சன் முகப்பொலிவு சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதன் பின்னர் அவர் கண்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன், கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டதாகப் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் அவர் பதிவு செய்து இருந்தார்.

தனக்கு ஏற்பட்ட விளைவுகளுக்குத் தவறான சிகிச்சையே காரணம் என்பதால் ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கோரி ரைசா வில்சன், தோல் சிகிச்சை மருத்துவருக்குத் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்க்கு பதில் தரும் வகையில் தோல் சிகிச்சை மருத்துவர் பைரவி செந்திலும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்குமாறு கோரியிருந்தார். அதற்க்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை ரைசா, மருத்துவர்கள் போலியான விளம்பரங்கள் மூலம் அப்பாவி மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்காமல், பொதுமக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்வதாக நினைக்கிறேன்.

மேலும், மருத்துவத்துறை விதிமுறைகளை மீறி மக்களுக்கு மருந்து பரிந்துரைத்து பணத்தைக் கொள்ளையடிக்கும் மருத்துவர்களின் செயல்கள் சட்டவிரோதமானவை என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதற்க்கு பதிலடி தரும் வகையில் மருத்துவர் பைரவி செந்தில், பொதுவெளியில் நடிகை ரைசா வில்சன் எங்களை பற்றி அவதூறாக பேசியதற்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நடிகை ரைசா சிகிச்சைக்கான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தவறிருக்கலாம் என மருத்துவர் செந்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Rissa Wilson ,Pieravi Sentle , Doctor Bhairavi Senthil sues actress Raisa Wilson for Rs 5 crore damages Complaining about slandering us in public
× RELATED நடிகை ரைசா வில்சனிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு...