×

அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு 2,247 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன-விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தகவல்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு நேற்று 2,247 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்ததாக  விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார். ராணிப்பேட்டை அடுத்த அம்மூரில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு லாலாப்பேட்டை, சோளிங்கர், பொன்னை, அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜா, ஆற்காடு, விளாப்பாக்கம், திமிரி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் அவைகளை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் விளைந்த பல்வேறு ரக நெல் மூட்டைகளை அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்து வந்து விற்பனை செய்து பணத்தை பெற்றுச்செல்கின்றனர்.

இந்தநிலையில், அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு நேற்று 2,247 நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்தனர். அதில் 75 கிலோ நெல் மூட்டைகளின் விலையாக ஏடிடி 36 வகை நெல் குறைந்தபட்ச விலையாக ₹971க்கும், அதிகபட்ச விலையாக ₹974க்கும், ஏடிடி 37 வகை குண்டு நெல் குறைந்தபட்ச விலையாக ₹857க்கும், அதிகபட்ச விலையாக ₹1,019க்கும், கோ 45 நெல் வகை குறைந்தபட்ச விலையாக ₹940க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ₹951க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, கோ 51 வகை நெல் குறைந்தபட்ச விலையாக ₹944க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ₹981க்கும், வகை நெல் ₹1,146க்கும், நர்மதா வகை நெல் குறைந்தபட்ச விலையாக ₹888க்கும், அதிகபட்ச விலையாக ₹1,123க்கும், சோனா நெல் வகை குறைந்த பட்ச விலையாக ₹941க்கும், அதிகபட்ச விலையாக ₹1,152க்கும், சுவித்ரா 43 நெல் வகை அதிகபட்ச விலையாக ₹1,039க்கும் ஆர்.என்.ஆர் வகை நெல் அதிகபட்ச விலையாக ₹1,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில், அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள 8 நெல் குடோன்களில் ஐந்தாயிரம் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் நெல் மூட்டைகள் வைக்க இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தால் நேற்றைய நெல் மூட்டைகளில் சில ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பழனி தெரிவித்தார்.

Tags : Ammur Regulated Market ,Superintendent ,Information , Ranipettai: 2,247 bundles of paddy were sold at the Ammoor Regulatory Sales Hall next to Ranipettai yesterday.
× RELATED வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் தீவிர சோதனை