×

ஆக்சிஜன் உற்பத்தி தேவை!: நெருடல், உறுத்தலோடு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உடன்படுகிறோம்..வி.சி.க. தலைவர் திருமாவளவன்..!!

சென்னை: ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது என்ற அனைத்து கட்சி கூட்ட முடிவுக்கு நெருடல்கள் இருந்தாலும் உடன்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். எனினும் மாவட்டங்கள் தோறும் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இன்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என்று அனைத்து தரப்பினரும், அனைத்து கட்சியினரும் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம். 


அதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். வேறு எதற்கும் மின்சார இணைப்பு கொடுக்கக்கூடாது என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்குகின்ற கூட்டமாக இன்று ஒரு கூட்டத்தை நடத்தி முடித்திருக்கின்றனர். இவை நெருடலை தருகிறது. பெரும் உறுத்தலை தருகிறது. இருப்பினும் ஆக்சிஜன் உற்பத்தி தேவை என்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இத்தகைய முடிவு எடுத்துள்ளதால் நெருடல்களோடு, உறுத்தல்களோடு ஆலையை திறக்க உடன்படுகிறோம். 


ஆனாலும் மீண்டும் தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது மட்டுமே இதற்கு தீர்வு ஆகாது. ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே ஒட்டுமொத்த தேவைகளை பூர்த்தி செய்துவிடாது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை விரைவில் திறக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.  



Tags : Thirumavalavan , Oxygen production, Nerudal, Sterlite plant, Thirumavalavan
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு