மதுரை: மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பரவாயில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பல கட்டங்களாக கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.