×

ஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் திடீர் விலகல்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக ஆடி வருகிறார். இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் ஆடி உள்ள அவர் பெரிதாக விக்கெட் எதுவும் வீழ்த்த வில்லை. இருப்பினும் டெல்லியின் முக்கிய வீரராக இருந்துவந்தார். சென்னையில் நேற்று கடைசி லீக்போட்டியில் ஆடிய நிலையில் டெல்லி அணி அகமதாபாத்திற்கு புறப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து அஸ்வின் விலகி உள்ளார். இது தொடர்பாக அஸ்வின் டுவிட்டர் பதிவில், “ 2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை (இன்று) முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கொரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம். அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் சேர்வேன் என எதிர்பார்க்கிறேன் . நன்றி டெல்லி கேபிடல்ஸ்” எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே பயோ-பபுள் சூழலை சமாளிக்க முடியாமல் ராஜஸ்தான் அணியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ டை, இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகியோர் விலகி உள்ளனர்.



Tags : Aswin ,IPL , Aswin abruptly withdraws from IPL series
× RELATED பெரம்பலூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி