சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரிய வழக்கு குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. காலை 9.15 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.