டெல்லி: நாடு முழுவதும் பிஎம்கேர்ஸ் நிதியில் இருந்து புதிதாக 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொது சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க மத்திய அரசு நிதி உதவி அளித்துள்ளது. மாவட்ட தலை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.