திருவனந்தபுரம்: கேரளா, தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில், கேரள மாநிலம், செங்கனூரை சேர்ந்த சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக கேரளா, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு காவல் நிலைங்களில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 27ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சிறையில் அடைக்கும் முன்பாக அவரிடம் ெகாரோனா அறிகுறிகள் ெதன்பட்டதால், கண்ணூரில் உள்ள பெண் கைதிகளுக்கான சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையே, கேரள சுற்றுலா வளர்ச்சித் துறை மற்றும் அரசு மதுபான விற்பனை கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் இருந்து ₹25 லட்சத்துக்கும் ேமல் பணம் வசூலித்ததாக சரிதா நாயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கிலும் நேற்று முன்தினம் நெய்யாற்றின்கரை போலீசார் அவரை கைது செய்தனர். இதுபோல், மேலும் பல வழக்குகளில் சரிதா நாயருக்கு பல நீதிமன்றங்கள் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளன. இதனால், அவர் மீது வரிசையாக வழக்குகள் பாயும் என்று தெரிகிறது.