சென்னை: சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 976ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரே தெருவில் 6 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, சென்னையில் 249 தெருக்களில் தலா 10 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 727 தெருக்களில் தலா 6 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.