×

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் 3 போலீஸார் உயிரிழப்பு!!

சென்னை : சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் 3 போலீஸார் உயிரிழந்தனர். நேற்றிரவு, இன்று அதிகாலையில் 2 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உளவுத்துறை தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த காவலர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக நேற்று உயிரிழந்தார். சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த கருணாநிதி (48). இவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உளவுத்துறை காவலராக அயல் பணியில் இருந்தார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர் ஒருவர் நேற்றிரவும், மற்றொரு காவலர் இன்று அதிகாலையும் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 3 காவலர்கள் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்தில் உளவுத்துறை போக்குவரத்து பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் முருகேசன்(51). எம்.கே.பி நகர், கொடுங்கையூரில் வசித்துவந்தார். முருகேசனுக்கு கடந்த 15ம் தேதி இரவு 11:00 மணியளவில் கொரோனாவால்  மூச்சுத்திணறல் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 7.00 மணி அளவில் உயிரிழந்தார்.

இதேப்போன்று அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமை காவலர் மகாராஜன்(38). இவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் கடந்த 14-ம் தேதி தொற்றால் பாதிப்படைந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார்.சென்னையில் 24 மணி நேரத்தில் 3 காவலர்கள் உயிரிழந்தது போலீஸார் இடையே அதிர்ச்சிசையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai , கொரோனா
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...