×

கரூர் குகைவழிப்பாதை அருகே வாய்க்கால் வடிகாலில் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர் : கரூர் குகைவழிப்பாதை அருகே வாய்க்கால் வடிகால் பாலத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பால் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் குளத்துப்பாளையம் இடையே குகைவழிப்பாதை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், குகை வழிப்பாதையை ஒட்டி பெரியகுளத்துப்பாளையம் அருகே வாய்க்கால் வடிகால் பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

கடந்த சில நாட்களாக வாய்க்கால் பாலத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்று பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்கி தண்ணீர் எளிதாக செல்ல தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur cavern , Karur: A blockage in the canal drainage bridge near the Karur cavern is causing health problems due to stagnant sewage.
× RELATED யானை தாக்கி விவசாயி பலி