×

கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம் : தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள்!!

சென்னை : பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே ரெம்டெசிவர் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்ளக்கூடாது. பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ரெம்டெசிவர் மருந்து தேவைப்படுவதில்லை. தமிழகம் சவாலான காலகட்டத்தில் உள்ளது. எனவே பொதுமக்கள் பதற்றமடைய கூடாது. ஆக்கப்பூர்வமாக சிந்தித்து அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். சென்னையில் 12 ஸ்கிரீனிங் சென்டர் உள்ளது .அங்கு பொதுமக்கள் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் கண்காணிப்பு மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் புதிதாக 360 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக 2,400 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். கோவிட் கவனிப்பு மையங்களில் 9,503 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் போதிய படுக்கை வசதிகள் உள்ளன.மக்கள் பதட்டம் அடைய வேண்டாம். அரசு மருத்துவமனைகளில் உள்ள வரம்பை தாண்டாமல் இருக்க பொது மக்கள் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.செவிலியர்கள், மருத்துவர்கள் கூடுதல் பணிசுமையுடன் பணியாற்றி வருகின்றனர், என்றார்.


Tags : Tamil Nadu Health Department , ராதாகிருஷ்ணன்
× RELATED மதுரை எய்ம்ஸ் விவகாரம் ஒன்றிய நிதி...