டெல்லி: மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.150 விலைக்கே கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.