சென்னை : சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி இல்லை தனியார் நிறுவனத்திடம் இருந்துதான் தினமும் ஆக்சிஜன் பெறப்படுகிறது என மருத்துவமனை டீன் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்படுவதாக பரவி வரும் தகவல் தவறானது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்