×

கொரோனாவுக்கு ஏட்டு உயிரிழப்பு

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரம் பிஆர்ஓ காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் கருணாநிதி (48). இவருக்கு சுந்தரவல்லி என்ற மனைவியும், சாய் கிஷோர் என்ற மகனும் உள்ளனர். இவர் கடந்த 1997ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வுடன் மாநகர காவல் துறையில் நுண்ணறிவு பிரிவில் ேகாட்டூர்புரம் பகுதி தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 13ம் தேதி கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிறகு காய்ச்சல் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதைதொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கருணாநிதிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். உரிய பாதுகாப்பின்படி நேற்று மாலை அவரது உடல் சுடுகாட்டில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.


Tags : Corona , Eight casualties to Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...