×

2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை வந்தது

சென்னை: 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் புனேயில் இருந்து சென்னை வந்தது. மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் 20 லட்சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்டது. இந்நிலையில், 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு சென்னை வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் 6 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Govshield ,Chennai , 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை வந்தது
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...