மும்பை : மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 13 நோயாளிகள் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் அருகே வசாயில் விஜய் வல்லாப் என்னும் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை மையத்தில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 நோயாளிகள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.மேலும் பலர் காயமடந்தனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தீ விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமாகவும் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தீ விபத்து குறித்து விசாரணை நடத்துமாறு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.