சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாகுறை இல்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டதாக எழுந்த புகாரை தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை மேற்கொண்டது. மேலும் அரசு மருத்துவமனைகளில் 31,000 ரெம்டெசிவிர் மருந்து இருப்பு உள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.