ஈரோடு : ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்றும் நாளையும் அந்த மருத்துவமனை மூடப்படுவதாக மருத்துவமனை நிருவாகம் அறிவித்துள்ளது. மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.