செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் 30 நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் படுக்கை நிரம்பிவிட்டதால் சிகிச்சைக்கு வந்த பலர் படுக்கை கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளார். ஒரு சில நோயாளிகள் முதலுதவி சிகிச்சை மட்டும் செய்துவிட்டு வேறு மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர்.