×

கோவிட் காப்பீடு ரூ.50 லட்சம்.. நேற்று கடிதம் எழுதினேன்.. இன்று நல்ல செய்தி வந்துள்ளது -மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தகவல்

சென்னை : கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கும் திட்டம் புதுப்பிக்கப்படாமல் இருந்தது பற்றி மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் வந்திருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நேற்று கோவிட் முன்களப் பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் காப்பீடு புதுப்பிக்கப்படாமல் இருப்பதை வேதனையோடு பகிர்ந்து, உடனடியாக திட்டம் நீட்டிக்கப்பட ஆவண செய்யுமாறு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். இன்று நல்ல செய்தி கிடைத்துள்ளது. முன்வரிசை பணியாளர்களை காப்பீடு திட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதுப்பிக்க படுவதாக செய்தி வந்துள்ளது. அமைச்சருக்கு நன்றி. ஆனால் இரண்டு கேள்விகள் எஞ்சி நிற்கின்றன.

ஒன்று, இதற்கான பாலிசி 24.3.2021 முடிவடைந்துவிட்டது. அன்றைய தினம் நள்ளிரவு வரை உயிர் இறந்தவர்களுக்கான காப்பீட்டிற்கான விண்ணப்பம், ஆவணங்கள் 24.4.2021க்குள்ளாக வரப்பெற்று உரிமப் பட்டுவாடா செய்யப்படும். இதுவே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்களின் 24.3.2021 கடிதம் தெரிவிப்பது. ஆனால், அமைச்சகத்தின் டுவிட்டர் செய்தி 24.4 2021 வரையில் இத்திட்டத்தின் கீழ் நீட்டிக்கப்பட்டு இருப்பது போன்ற பொருள் தருகிறது. ஆனால் அதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதா? இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இசைவு பெறப்பட்டுள்ளதா? என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டும்.

24.3.2021 நள்ளிரவுக்குப் பின் துவங்கி இன்று வரை உயிர் இறந்தவர்களுக்கான காப்பீட்டின் கதி என்ன? ஒரு முன்களப் பணியாளருக்கு கூட காப்பீடு பயன் கிடைக்காமல் போய்விடக்கூடாது. அரசு அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் எனக் கூறி என்று மீண்டும் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

ஒரு வேளை காப்பீடு திட்டத்தில் அவர்களுக்கான உரிமைகளை கிடைக்காவிடில் பி.எம் கேர் நிதி உடனடியாக பயன்படுத்தப்பட வேண்டும். கோவிட் போராளிகளின் குடும்ப நிலைமை வரக்கூடாது. சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமின்றி கோவிட் எதிர்ப்புக் களத்தில் அரும்பணி ஆற்றுபவர்கள் எல்லாரும் காப்பீடு பயன்பெற வரையில் புதுப்பிக்கப்படுகி திட்டம் இருக்க வேண்டும். அமைச்சரின் பதிலை எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Madurai ,S. Venkatesh , சுகாதாரத்துறை
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...