×

ரேஷன் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ மோகன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை!!

சென்னை : ரேஷன் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக அண்ணாநகர் திமுக எம்எல்ஏ மோகன் உள்ளிட்ட 5 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2கடந்த 2017ம் ஆண்டு அதிமுக அரசு ரேஷன் பொருட்கள் விலையை உயர்த்தியதை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை அரும்பாக்கத்தில் ரேஷன் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாநகர் திமுக எம்எல்ஏ மோகன் உள்ளிட்ட 5 நிர்வாகிகள் மீது பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2 வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் திமுக எம்எல்ஏ உட்பட 5 பேரையும் விடுதலை செய்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. திமுக எம்எல்ஏ மோகன் உள்ளிட்ட 5 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறிய நீதிபதி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கில் நீதிமன்றத்தில் போராடி விடுதலை பெற்றுள்ளோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Tags : DMK ,MLA Mohan , திமுக எம்எல்ஏ மோகன்
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி