சென்னை: சட்டவிரோத கடைகளை அனுமதிக்கும் ஷாப்பிங் மால் உரிமங்களை ரத்து செய்யகோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மனுதாரருக்கு ரூபாய் 100 அபராதம், ஓராண்டுக்கு பொதுநல வழக்கு தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. பொதுநல வழக்கு நடைமுறையை தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திட்ட அனுமதியை மீறியது தொடர்பாக மாநகராட்சியிடம் புகாரளிக்க மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.