சென்னை: நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என இருக்காமல் சமூகத்துக்கு ஏதேனும் செய்ய விரும்பியவர் விவேக் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கலாமின் இளவலாக, பசுமை காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கே பேரிழப்பு எனவும் அவர் கூறினார்.