×

'மணியடித்தது தான் கொரோனா யுக்தி': ராகுல் காந்தி

கொரோனாவை கையாளும் விதத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தடுப்பூசி திருவிழா குறித்து விமர்சித்த அவர் நேற்றைய தனது டிவிட்டர் பதிவில், ‘மத்திய அரசின் கொரோனா யுக்திகள்  நிலை 1- துக்ளக் லாக்டவுன் விதித்தது, நிலை 2- மணியடித்தது, 3-கடவுள் புகழ் பாடுவது,’ என கூறியுள்ளார்.

60 லட்சம் டோஸ் தேவை: ஜெகன் மோகன் கடிதம்

* ஒடிசாவில் கொரோனா தடுப்பூசி இருப்பு மோசமான கட்டத்தை எட்டியிருப்பதாக அம்மாநில அரசு கூறி உள்ளது. மாநில தடுப்பூசி பொறுப்பாளர் பிஜய் பனிகிராஹி கூறுகையில், ‘‘மாநிலத்தில் 1500 தடுப்பூசி மையங்களிலும் போதுமான தடுப்பூசி இருப்பு இல்லை. 700 மையங்களை மட்டுமே நடத்தும் நிலையில் உள்ளோம்’’ என கூறி உள்ளார்.

* ஆந்திராவிலும் தடுப்பூசி தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. உடனடியாக மாநிலத்திற்கு 60 லட்சம் தடுப்பூசி தேவை இருப்பதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Tags : Rahul Gandhi , Corona
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...