×

மாஸ்க் இல்லையா? 1 லட்சம் அபராதம்

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில்  கொரோனா தடுப்பு ஆலோசனை நேற்று நடந்தது. பின்னர், உள்துறை  அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ``கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும்  அபராதத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். 2வது  முறையாகவும்  முகக்கவசம் இல்லாமல் அவர்கள் சிக்கினால்  ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திங்கள்  அல்லது செவ்வாய்க்கிழமையில் இவை அமல்படுத்தப்படும். வெளி  மாநிலங்களி–்ல் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியமாகும்,’’ என்றார்.


Tags : corona , mask
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...