மும்பை: ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 107 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். தொடர்ந்து, களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகப்பட்சமாக ஷாருக்கான் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார்.