×

ஆரல்வாய்மொழியில் டெம்போவில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

ஆரல்வாய்மொழி, மார்ச்28: ஆரல்வாய்மொழியில் செங்கச் சூளையில் டெம்போவில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (65). செங்கல் சூளையில்  செங்கல்களை டெம்போவில் ஏற்றும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த 25ம் தேதி இரவு செண்பகராமன் புதூர் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் டெம்போவில் செங்கல் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது டெம்போவின் மேல் நின்றிருந்த பாலகிருஷ்ணன் திடீரென்று தடுமாறி மேலிருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். உடனே சக தொழிலாளர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் இறந்தார். இதையடுத்து ஆரல்வாய்மொழி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post ஆரல்வாய்மொழியில் டெம்போவில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Aralwai Mozhi ,Aralwaimozhi ,Nagercoil… ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...