×

சாத்தான்குளம் அருகே தோட்டத்திற்கு வந்த புள்ளிமான் மீட்பு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் தஞ்சமடைந்த புள்ளிமான் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே மேலநடுவக்குறிச்சியில் தவசிலிங்கம் என்பவருக்கு சொந்தமான தோட்டம் மற்றும் அருகில் கோயில் உள்ளது. இத்தோட்டத்தில் நேற்று காலை தஞ்சமடைந்த புள்ளிமானின் கொம்பில் காயம் காணப்பட்டது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் திருச்செந்தூர் வனத்துறை உதவி ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையில் விரைந்து வந்த வனத்துறையினர் 4 பேர், புள்ளிமானை மீட்டு காயத்துக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் கொண்டு விட நடவடிக்கை எடுத்தனர். களக்காடு அல்லது வல்லநாடு பகுதியில் இருந்து புள்ளிமான் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இப்பகுதியில் வந்தபோது நாய்கள் துரத்தியதால் தோட்டத்தில் தஞ்சம் புகுந்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Satankulum , Deer
× RELATED சாத்தான்குளம் வழக்கை விசாரிக்க 5 மாதம் அவகாசம்