விழுப்புரம்: தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம். சட்டமன்ற தேர்தலில் இவர் விழுப்புரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தபின் ஓய்வெடுத்து வந்தார். நேற்று அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி, கொரோனா தொற்று காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.