×

எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் 7 மனுக்களுக்கு உடனடி தீர்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி தலைமையில் நடந்த சிறப்பு மனு முகாம். 16மனுக்கள் பெறப் பட்டது. இதில் 7 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில் நேற்று (22ம் தேதி) புதன்கிழமை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், சிறப்பு மனுமுகாம் நடைபெற்றது. இந்த மனு முகாமில் பெரம்பலூர் மாவட்ட ஏடி எஸ்பிக்கள் (தலைமையிடம்) மதியழகன், (பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப்பிரிவு) பாண்டியன், டிஎஸ்பிக்கள் (பெரம்பலூர்) பழனிச்சாமி, (மங்களமேடு) சீராளன், (மாவட்ட குற்றப்பிரிவு) தங்கவேல் ஆகியோர் பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.மேலும் இந்த சிறப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்கள மேடு, அரும்பாவூர், வி.களத்தூர், கை.களத்தூர், மருவத் தூர் காவல் நிலையங்கள், அனைத்து மகளிர் காவல் நிலையம் , மாவட்ட மது வி லக்கு பிரிவு காவல் நிலை யம் உள்ளிட்ட அனைத்துக் காவல்நிலை யங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக் டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்புப் பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டனர்.இந்தச் சிறப்பு மனுமுகாம் மூலம் நேற்று 16 மனுக்கள் பெற்றப்பட்டு அதில் 7 மனுக்கள் மீது உட னடியாக நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. மீதமுள்ள 9 மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கைஎடுக்க சம் மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது….

The post எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் 7 மனுக்களுக்கு உடனடி தீர்வு appeared first on Dinakaran.

Tags : Petitions Camp ,SP ,Perambalur ,Special Petition Camp ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் அருகே மனநலம் பாதித்தவர்...