×

அலுவலக ஊழியர்களுக்கு தொற்று வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார் உபி முதல்வர்

லக்னோ: அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் தனது டிவிட்டரில், ‘‘எனது அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால் முன்னெச்சரியாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். வீட்டிலிருந்தே டிஜிட்டல் வாயிலாக பணிகளை மேற்கொள்வேன்’’ என கூறி உள்ளார்.

Tags : UP ,Chief Minister , The UP Chief Minister isolated the office staff from the infected home
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை