×

சபரிமலையில் இன்று விஷூ கணி தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை  ஐயப்பன் கோயிலில் இன்று விஷூ கணி தரிசனம் காலை 5 முதல் 7 மணி வரை  சன்னிதானத்தில் நடைபெறும். நேற்று இரவு அத்தாழப்பூஜைக்கு பிறகு, விஷூ கணி  சன்னதியில் தயார் செய்யப்பட்டு நடை சாத்தப்பட்டது. இதற்காக காய், கனிகள்,  கணிக்கொன்றை உள்ளிட்ட மலர்கள் வைக்கப்பட்டது. இன்று காலை நடை திறந்த  பிறகு, கோயிலில் விளக்குகளை ஏற்றி ஐயப்பனுக்கு விஷூ கணி தரிசனம்  காண்பிக்கப்படும். தொடர்ந்து பக்தர்கள் கணிதரிசனம் மேற்கொள்ளலாம். கோயில்  தந்திரி கண்டரர் ராஜீவரர், மேல்சாந்தி வி.கே.ஜெயராஜ் போற்றி ஆகியோர்  பக்தர்களுக்கு கை நீட்டமும் வழங்குவர். நேற்று முன்தினம் ஐயப்ப சுவாமிக்கு  களபாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை மற்றும் படிபூஜை நடந்தது.

Tags : Vishu Kani Darshan ,Sabarimala , Vishu Kani Darshan today at Sabarimala
× RELATED பங்குனி உத்திர திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு