×

நன்னடத்தை விதி மீறிய ரவுடிக்கு 351 நாள் சிறை

வேளச்சேரி: பெரும்பாக்கம் இந்திரா நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் சிவா(38). பிரபல ரவுடியான  இவர் மீது, பல்வேறு காவல் நிலையங்களில், இரண்டு கொலை வழக்கு உள்ளிட்ட 8 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 27ம் தேதி பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர் முன்னிலையில், தான் திருந்தி வாழப்போவதாக கூறி  நன்னடத்தை உறுதி மொழி பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால், கடந்த மாதம் 14ம் தேதி பெரும்பாக்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட எல்லையில் தனது கூட்டாளியுடன் விஜய் பாபு என்பவரை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றார்.

இதனையடுத்து, அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த பெரும்பாக்கம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, நன்னடத்தை உறுதி மொழியை சிவா மீறியதால் 351 நாட்கள் சிறை தண்டனை விதித்து பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டார்.



Tags : Rowdy , Rowdy jailed for 351 days for violating probation
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...