சென்னை: கொரோனா காலத்தில் விதிமீறுபவர்களிடம் காவல்த்துறையினர் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார். விதி மீறுபவர்களிடம் அபராதம் மட்டுமே விதித்து பெருந்தொற்று ஆபத்தை வலியுறுத்தி தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் மகேஷ்குமார் கூறியுள்ளார்.