தஞ்சை: தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் தடுப்பூசி இருப்பு இல்லை என்று திரும்பி அனுப்பப்படுகின்றனர். தடுப்பூசி போட வருபவர்களை ஏதாவது ஒரு காரணம் கூறி மருத்துவமனை ஊழியர்கள் தட்டிக்கழிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.