×

புதுக்கோட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் போதைப்பொருள் பறிமுதல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் குட்கா பொருட்களை குற்ற புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். தட்சணாமூர்த்தி மார்க்கெட் அருகே அப்துல் சலாம் என்பவர் வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் வீட்டருகே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது போஸ் நகரை சேர்ந்த தாஜுதன் என்பவர் குட்கா பொருட்களை வாங்க வந்துள்ளார்.

அப்போது அப்துல் சலாமின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் வீட்டில் சோதனையிட்டதில் 1 டன் அளவிலான குட்கா பொருட்கள் 20 மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் பொருட்களை வாங்க வந்த தாஜுதனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அப்துலை தேடி வருகிறார்கள். புதுக்கோட்டையில் 1 டன் அளவிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pudukkottai , Drug
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...