நாமக்கல்: குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமியை 12 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப்பிரியா புகாரின் பேரில் 12 பேரிடம் திருச்செங்கோடு மகளிர் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளிட்ட 11 பேரை அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.