×

கோபி அருகே மாஸ்க் அணியாத தம்பதி கைது

கோபி: கோபி அருகே உள்ள கரட்டூரில் முகக்கவசம் அணியாமல் பொருட்கள் வாங்கி வந்த தம்பதியை கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வருவதால், அனைவரும்  முகக்கவசம் அணிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டூரில் உள்ள பர்னீச்சர் கடையில், கலெக்டர் கதிரவன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, முகக்கவசம் அணியாமல் பொருட்கள் வாங்கி கொண்டு  இருந்த தோரணவாவியை சேர்ந்த ராஜன், அவரது மனைவி செல்வி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய கோபி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். முகக்கவசம் அணியாத தம்பதி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kobe , Masked couple arrested near Kobe
× RELATED கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி; “கோடியில் இருவர்” வெப் சீரிஸ்