மும்பை: ஐபிஎல் 2021 டி20 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்களை பஞ்சாப் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியில் அதிரடியாக ஆடிய தீபக் ஹுடா 64 ரன்களும், ராகுல் 91 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.