சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை கர்நாடக அரசு தொடங்கியது. மேகதாதுவில் நேரில் ஆய்வு செய்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றசாட்டு கூறியுள்ளார். மேகதாது அணை கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்ல வனப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.