×

‘தடுப்பூசி இயக்கத்தை திருவிழா என்று கூறுவதா?'... வெற்று பெருமையால் கொரோனாவை வெல்ல முடியாது என ப.சிதம்பரம் சாடல்!!

சென்னை : தடுப்பூசி பணிகள் மற்றும் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தோல்விகளை மறைக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தை ஒரு நாள் திருவிழா என்று அழைக்கிறது, மற்றொரு நாள் அதே திட்டத்தை 2வது போர் என்று அழைக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ப. சிதம்பரம், இதில் எது உண்மை என்று வினவியுள்ளார்.

பிரதமர் மோடி முதல் ஊரடங்கை அறிவித்த மறு நாளே 18 நாட்கள் நடைபெற்ற மகாபாரத போர் வெற்றியைப் போல, கொரோனாவுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றி அடைவோம் என்று கூறி இருந்ததை சுட்டிக் காட்டியுள்ள ப. சிதம்பரம், பிரதமரின் அந்த போருக்கு என்ன நேர்ந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார். வேற்று பெருமை, சொல்லாட்சி மற்றும் மிகைப்படுத்துதல் ஆகியவற்றால் கொரோனாவை வென்று விட முடியாது என்று தெரிவித்துள்ள ப.சிதம்பரம், தடுப்பூசி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தோல்விகளை மறைக்க மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.  


Tags : SATTLE SADEL , ப சிதம்பரம்
× RELATED கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் ஒன்றிய...