×

கோவை அருகே நூற்பாலையில் தீ விபத்து: பல கோடி மதிப்பிலான நூல்கள் எரிந்து சேதம்

கோவை: கோவை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான நூல்கள் எரிந்து சேதமடைந்தன. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்த வையாபுரியப்பன் நடத்தி வந்த நூற்பாலையில் இரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்து 5 வாகனங்களில் விரைந்து சென்ற வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் அதற்குள்ளாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துவிட்டன. வெளியூர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் அதிக சேதம் ஏற்பட்டு விடுவதால் நூற்பாலைகள் நிறைந்த கருமத்தம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Coime , Coimbatore, fire accident
× RELATED பூனை காணவில்லை; கண்டுபிடித்து...