×

கோவை - பாலக்காடு இடையே கடந்த 5 ஆண்டுகளில் ரயில் மோதி 8 யானைகள் உயிரிழப்பு

கோவை : கோவை - பாலக்காடு வழித்தடத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 8 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.கோவை நவக்கரை அருகே கடந்த மார்ச் 15-ம் தேதி கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஆண் யானை உயிரிழந்தது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, கோவை போத்தனூர் - பாலக்காடு வழித்தடத்தில் யானைகள் அடிக்கடி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது தொடர்பாக, தெற்கு ரயில்வேயிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகள் கேட்டிருந்தார்.

Tags : Gowai , கோவை
× RELATED வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் 2வது நாளாக தீ