சென்னை: ஆவடி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் 15 புறநகர் சிறப்பு ரயில்கள் பட்டாபிராம் மற்றும் இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் இன்று நிற்காது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மார்க்கத்தில் உள்ள ஆவடி ரயில் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருத்தணியிலிருந்து காலை 8.45 மற்றும் 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் ரயில்கள், அரக்கோணத்திலிருந்து காலை 9.30 , 10.10, 10.30 மற்றும் 11.00 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் ரயில்கள், திருவள்ளூரிலிருந்து காலை 10.00, 10.30, 11.15, 11.25, 11.50, பகல் 12.00, 12.15, 12.55 மற்றும் மதியம் 1.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் 15 புறநகர் சிறப்பு ரயில்கள் பட்டாபிராம் மற்றும் இந்துக் கல்லூரி ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.