×

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு குண்டாஸ்

சென்னை: தொ டர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு ஏமாற்றிய 2  நபர்கள் உட்பட     8 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். போலி  வலைத்தளங்கள் மூலமாக அந்நிய செலவாணி, பங்கு வர்த்தகத்தில் முதலீடாக  கோடிக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில் தெருவை சேர்ந்த சையது அபுதாகீர் (34), பரங்கிப்பேட்டை காயிதே மில்லத் தெருவை சேர்ந்த சையது அலி உசேன் (40), அமைந்தகரை பகுதியில் ஜெயந்தி என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட புளியந்தோப்பு ராஜா கார்டன் தெருவை சேர்ந்த அந்தோணிகுமார் (36), எழும்பூர், டாக்டர் சந்தோஷ் நகரை சேர்ந்த செல்லப்பன் (49), நம்மாழ்வார்பேட்டை, சுப்பராயன் 4வது தெருவை சேர்ந்த பாலாஜி (23), மடிப்பாக்கம் பகுதியில் முதியவரை தாக்கி ரூ.6 லட்சத்தை  பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மண்ணிவாக்கம் மேட்டுதெருவை சேர்ந்த பிரபு (எ) அப்புகுட்டி (24), நெல்லை, சேரன்மகாதேவி, பிள்ளைகுளம் பகுதியைசேர்ந்த ஐசக் (31), நெல்லை, சேரன்மகாதேவி, கரிசல்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ் (எ) குரு (28) ஆகிய 8 பேர் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Kundas for 8 people involved in serial crimes
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...