×

உரங்களின் விலையை உயர்வுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

சென்னை: உரங்களின் விலையை உயர்வுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். உரங்களின் விலையை உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக அரசு என்று குற்றம்சாட்டியுள்ளார். ஒட்டுமொத்தமாக உரங்களின் விலையை 60% அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இப்கோ உர நிறுவனம் டிஏபி, பொட்டாஷ், கலப்புரங்களின் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. உரங்களின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை உர உற்பத்தி நிறுவனங்களிடமே மத்திய அரசு ஒப்படைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : Review Secretary ,Viko , Secretary-General of the Presidency, Vaiko, condemned the increase in the price of fertilizers
× RELATED மக்கள் சக்தியே மகேசன் சக்தி என்பதை...