×

ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் தீப்பற்றி எரிந்த தென்னை, புளியமரங்கள்

ஆம்பூர் : ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் தென்னை, புளியமரங்கள் நேற்று விஷமிகள் வைத்த தீயால் எரிந்ததை அடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உமராபாத் அடுத்த மாச்சம்பட்டில் ஆம்பூர்-பேரணாம்பட்டு சாலையில் உள்ள விவசாய நிலத்தில் பல்வேறு மரங்கள் உள்ளன.

இந்நிலையில் அவ்வழியாக நேற்று மாலை சென்ற விஷமிகள் சிலர் அங்கிருந்த சருகுகளுக்கு தீ வைத்துள்ளனர். இந்த தீ காற்றில் வேகமாக பரவி அருகில் இருந்த விவசாய நிலத்தில் பரவியது. அப்போது அங்கு இருந்த நான்கு தென்னை மரமும், இரண்டு புளிய மரங்களில் தீ   பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த கைலாசகிரி ஊராட்சி மன்ற செயலாளர் புகார் அளித்ததன் பேரில் ஆம்பூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு மரங்களில் பரவிய தீயை அணைத்தனர்.மேலும் அங்கு வந்த உமராபாத் போலீசார் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

Tags : Ambur , Ambur: A fire broke out at a farm near Ambur after coconut and citrus trees were set on fire yesterday.
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...