×

இந்தியாவில் உச்சமடையும் கொரோனா... ஒரே நாளில் 1,45,384 பேருக்கு தொற்று; 794 பேர் பலி...பீதியில் மக்கள்

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.68 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதே போல், பாதிப்பு 1.32 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 1,45,384 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,32,05,926 ஆக உயர்ந்தது.

* புதிதாக 794 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  1,68,436 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 77,567 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,90,859 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10,46,631 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 91.22% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.28% ஆக அதிகரித்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 7.50% ஆக அதிகரித்துள்ளது.

* இதுவரை இந்தியாவில்   9,80,75,160 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,91,511 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : Corona ,India , கொரோனா தடுப்பூசி
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...